என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே – (2)
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
1. தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன் – (2)
உம் வல்லமை உம் மகிமை
உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா- என் – (2)
2. படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன்- (2)
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா- (2)
3. மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது – (2)
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம் -(2)