நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்-2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்- (2) – நீர் என்னை
1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் – (2)
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்- என்- (2)
2. கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும் – (2)
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் – (2)
3. இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை – (2)
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன் -(2)
4. முன்குறித்தாரோ பிரித்து எடுத்தீரே
நீதிமானாக தினம் பார்க்கிறீர்
மன்றாடும் போது செவிசாய்க்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன்
5. உலகம் தரும் மகிழ்வை விட
மிக மேலான மகிழ்ச்சி நீரே
நீர் ஒருவரே பாதுகாத்து
சுகமாய் தினம் வாழ செய்வீர்