சாத்தானுக்கு எதிராய் எழுதப்பட்ட தீர்ப்பை
நடைமுறைப்படுத்திடுவோம்
வெற்றியை சுதந்தரிப்போம்
இத்தகைய மேன்மை
பரிசுத்தவான் நமக்கு
உண்டானது உரித்தானது
1. வாயிலே கர்த்தரை உயர்த்தும் துதி
நாவிலே கருக்குள்ள திருவசனம்
கட்டுவோம் சாத்தானின் கிரியைகளை
கல்வாரி வெற்றியால் ஜெயமெடுப்போம்
2. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கின
கர்த்தரை நினைத்து களிகூரட்டும்
சீயோன் தினம் தினம் மகிழட்டுமே
இராஜாதி ராஜாவை நினைவு கூர்ந்து – நம்
3. நம் கர்த்தர் தமது ஜனத்தின் மேல்
தயவு பிரியம் வைத்துள்ளார்
இரட்சிப்பால் அலங்கரித்து மகிழ்கின்றார்
வெற்றி தந்து சபையை பெருகச்செய்வார்