கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர்
போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன்
பகைவர் பார்த்து நகைத்திடாமல்
பாதுகாத்தீர் இதுவரையில்
1. உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன்
மனது உருகி சுகம் தந்தீர்
சாவுகுழியில் இறங்கவிடாமல்
உயிரைக் காத்து தப்புவித்தீர்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
உயர்த்தி மகிழ்கின்றேன்
2. பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் சங்.
பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள்
கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம்
நீடிக்கும் என்பது நிச்சயமே
3. இரவு நேரம் அழுகையென்றாலும்
விடியக்காலையில் ஆனந்தமே சங்.
உந்தன் தயவால் எனது ஜீவன்.
மலைபோல் உறுதியாய் நிற்கச் செய்தீர்
4. கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கி பார்த்தீர்
களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர்
துயர ஆடையை தூக்கி எறிந்து
மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே