கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் (என்)
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே (என்)
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – (2)
1. பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு எனவே
2. பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே
3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு எனவே
4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா
5. கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சு போச்சு