துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
அடைக்கலமே புகலிடமே
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதித்து
2. நாடித் தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டீர் – முழு
3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
4. உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்