உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது – (2)
1. உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை – (2)
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன் – (2)
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி – (2) – உம் பேரன்பில்
2. உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர் – (2)
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால் – (2) – இயேசையா
3. மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட – (2)
உந்தன் சமுகத்திலே – (2)
(நான்) மகிழ்ந்திருக்கிறேன் – (2) – இயேசையா