ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
1. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார் – உன்னில்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய்
2. நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
திகில் உன்னை அணுகாது
பயமில்லா வாழ்வு உண்டு
3. படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னை
விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய