Singer : L. R. Eswari
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
……………..
Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu
Unakkeno thadumaattram
Mana kangal naalai enai kaattum
Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu
Aayiram perkal parvaiyil nindru
Aaduvathellaam edharkku
Aalukku aalu ovvoru ennam
Manathinil undu adharkku
Paalukku aadaiyundu
Paavaikkum aadaiyundu
Paalai pol venmaiyallavi
Neerodu saernthaalum nenjodu saerththaalum
Maaraatha thanmaiyallavo….
Maaraatha thanmaiyallavo….
Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu
Poorana nilavu kaaranaththodu
Medaiyil vanthathu nadanthu
Poovizhi kinnam punnagai vannam
Yaavarukkum nal virunthu
Ennaththil vegamundu
Engengo povathundu
Pollaatha aasai enbathu
Yaarukkum kaalamundu saathikkum neramundu
Vettrikku velai vanthathu
Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu
Unakkeno thadumaattram
Mana kangal naalai enai kaattum
Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : .............................................
பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு
உனக்கேனோ தடுமாற்றம்
மனக் கண்கள் நாளை எனைக் காட்டும்
பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு
பெண் : ஆயிரம் பேர்கள் பார்வையில் நின்று
ஆடுவதெல்லாம் எதற்கு
ஆளுக்கு ஆளு ஒவ்வொரு எண்ணம்
மனதினில் உண்டு அதற்கு
பெண் : பாலுக்கும் ஆடையுண்டு
பாவைக்கும் ஆடையுண்டு
பாலைப் போல் வெண்மையல்லவோ
நீரோடு சேர்ந்தாலும் நெஞ்சோடு சேர்த்தாலும்
மாறாத தன்மையல்லவோ.....
மாறாத தன்மையல்லவோ.....
பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு
பெண் : பூரண நிலவு காரணத்தோடு
மேடையில் வந்தது நடந்து
பூவிழிக் கிண்ணம் புன்னகை வண்ணம்
யாவருக்கும் நல் விருந்து
பெண் : எண்ணத்தில் வேகமுண்டு
எங்கெங்கோ போவதுண்டு
பொல்லாத ஆசை என்பது
யாருக்கும் காலமுண்டு சாதிக்கும் நேரமுண்டு
வெற்றிக்கு வேளை வந்தது......
வெற்றிக்கு வேளை வந்தது......
பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு
உனக்கேனோ தடுமாற்றம்
மனக் கண்கள் நாளை எனைக் காட்டும்
பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு