Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Humming…..
Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Theeyai kondu moodar ellaam
Oorai kooda erikkalam
Theeyai kondu moodar ellaam
Oorai kooda erikkalam
Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Kobam mattum adangi vittaal
Gopurathil yeralaam
Kobam mattum adangi vittaal
Gopurathil yeralaam
Gunam irunthu manamirundhaal
Kadavulaaga maaralaam
Gunam irunthu manamirundhaal
Kadavulaaga maaralaam
Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Kann irandu kaal irandu
Kai irandu padaithaan
Katti vaithu kaapatharkku
Manadhu ondrai samaithaan
Kann irandu kaal irandu
Kai irandu padaithaan
Katti vaithu kaapatharkku
Manadhu ondrai samaithaan
Ninaithu paarkka maranthu vittaal
Murattu thanam valarum
Ninaithu paarkka maranthu vittaal
Murattu thanam valarum
Murattuthanam nirainthavanai
Ulagam ellam pazhikkum
Hoo oo oo hoo oo oo o
Haaa ..aaa..aaa..aaa..
Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Kaatrin vegam thanai adakki
Suthi koduthaal panpaadum
Malai kallai kooda malarai pola
Sedhuki vaithaal vandaadum
Kaatrin vegam thanai adakki
Suthi koduthaal panpaadum
Malai kallai kooda malarai pola
Sedhuki vaithaal vandaadum
Aattru vellam madaiyil vandhaal
Payirgal kodi undaagum
Aattru vellam madaiyil vandhaal
Payirgal kodi undaagum
Aathirathil arivu kandaal
Ulagam ellam kondadum
Hoo oo oo hoo oo oo o
Haaa ..aaa..aaa..aaa..
Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Theeyai kondu moodar ellaam
Oorai kooda erikkalam
Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : முனங்கல் .....
பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
தீயைக் கொண்டு மூடரெல்லாம்
ஊரைக் கூட எரிக்கலாம்
தீயைக் கொண்டு மூடரெல்லாம்
ஊரைக் கூட எரிக்கலாம்
பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
பெண் : கோபம் மட்டும் அடங்கி விட்டால்
கோபுரத்தில் ஏறலாம்
கோபம் மட்டும் அடங்கி விட்டால்
கோபுரத்தில் ஏறலாம்
குணமிருந்து மனமிருந்தால்
கடவுளாக மாறலாம்
குணமிருந்து மனமிருந்தால்
கடவுளாக மாறலாம்
பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
பெண் : கண்ணிரண்டு காலிரண்டு
கையிரண்டு படைத்தான்
கட்டி வைத்துக் காப்பதற்கு
மனது ஒன்றை சமைத்தான்
பெண் : கண்ணிரண்டு காலிரண்டு
கையிரண்டு படைத்தான்
கட்டி வைத்துக் காப்பதற்கு
மனது ஒன்றை சமைத்தான்
பெண் : நினைத்துப் பார்க்க மறந்து விட்டால்
முரட்டுத்தனம் வளரும்
நினைத்துப் பார்க்க மறந்து விட்டால்
முரட்டுத்தனம் வளரும்
முரட்டுத்தனம் நிறைந்தவனை
உலகமெல்லாம் பழிக்கும்
ஹோ.ஓ .ஓ.ஹோ.ஓ.ஓ....
ஹா..ஆஆ...ஆஅ.. ஹா...ஆஅ...
பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
பெண் : காற்றின் வேகம்தனை அடக்கி
சுதி கொடுத்தால் பண்பாடும்
மலைக்கல்லைக் கூட மலரைப் போலச்
செதுக்கி வைத்தால் வண்டாடும்
பெண் : காற்றின் வேகம்தனை அடக்கி
சுதி கொடுத்தால் பண்பாடும்
மலைக்கல்லைக் கூட மலரைப் போலச்
செதுக்கி வைத்தால் வண்டாடும்
பெண் : ஆற்று வெள்ளம் மடையில் வந்தால்
பயிர்கள் கோடி உண்டாகும்
ஆற்று வெள்ளம் மடையில் வந்தால்
பயிர்கள் கோடி உண்டாகும்
ஆத்திரத்தில் அறிவு கண்டால்
உலகமெங்கும் கொண்டாடும்
ஹோ.ஓ .ஓ.ஹோ.ஓ.ஓ....
ஹா..ஆஆ...ஆஅ.. ஹா...ஆஅ...
பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
தீயைக் கொண்டு மூடரெல்லாம்
ஊரைக் கூட எரிக்கலாம்
பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்