Singer : L. R. Eswari
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil
Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil
Ellorum adimaigal enakku
Ennodu yaeraalam irukku
Angangal thangangal angangae thangungal
Ondralla irandalla innum undu
Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil
Enakkum oottrikkodu
Mayakkam undaagattum
Irandu kayil edu
Manakkum sendaagattum
Enakkum oottrikkodu
Mayakkam undaagattum
Irandu kayil edu
Manakkum sendaagattum
Aadal modhum udal aasai pongum kadal
Jaadai koorum vizhi sorkkam kaattum vazhi
Meththai vanthaal viththai ellaam
Solvaen naanthaan
Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil…..aa….
Ulagam pollaathathu iruttil vilaiyaaduthu
Idhayam illaathathu ennai vilai kooruthu
Ulagam pollaathathu iruttil vilaiyaaduthu
Idhayam illaathathu ennai vilai kooruthu
Maanam irunthavarai vaazhvai paarththathillai
Naalum thuranthavarai yaarum veruppathillai
Achcham vetkkam michchamindri vittaen vaa vaa
Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil
Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil
Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
பெண் : எல்லோரும் அடிமைகள் எனக்கு
என்னோடு ஏராளம் இருக்கு
அங்கங்கள் தங்கங்கள் அங்கங்கே தங்குங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் உண்டு
பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்
பெண் : எனக்கும் ஊற்றிக் கொடு
மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு
மணக்கும் செண்டாகட்டும்
பெண் : எனக்கும் ஊற்றிக் கொடு
மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு
மணக்கும் செண்டாகட்டும்
பெண் : ஆடல் மோதும் உடல் ஆசை பொங்கும் கடல்
ஜாடை கூறும் விழி சொர்க்கம் காட்டும் வழி
மெத்தை வந்தால் வித்தை எல்லாம்
சொல்வேன் நான்தான்
பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்....ஆ.....
பெண் : உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கூறுது
உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கூறுது
பெண் : மானம் இருந்தவரை வாழ்வைப் பார்த்ததில்லை
நாலும் துறந்தவரை யாரும் வெறுப்பதில்லை
அச்சம் வெட்கம் மிச்சமின்றி விட்டேன் வா வா
பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் அடிமைகள் எனக்கு
என்னோடு ஏராளம் இருக்கு
பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்