Nallavan Kaiyil Naanayam Song Lyrics from Yaar Jambulingam – 1972 Film, Starring R.S. Manohar, Jothilakshmi, Manorama and Others. This song was sung by C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Vaali.
Singer : C. S. Jayaraman
Music by : T. R. Pappa
Lyrics by : Vaali
Nallavan kayil naanayam irunthaal
Naalu perukku saathagam
Nallavan kayil naanayam irunthaal
Naalu perukku saathagam
Adhu pollaathavan paiyil irunthaal
Ellaa uyirkkum paathagam
Ellaa uyirkkum paathagam
Nallavan kayil naanayam irunthaal
Naalu perukku saathagam
Iruppavan koduththaal vallal endragi
Iranthum iravaathirukkindraan
Iruppavan koduththaal vallal endragi
Iranthum iravaathirukkindraan
Panaththimir konda manithar nimirnthirunthaalum
Nadai pinamaaga nadakkindraan
Nallavan kayil naanayam irunthaal
Naalu perukku saathagam
Latchangal munnae latchiyamellaam
Echilai polae parakkumadaa
Latchangal munnae latchiyamellaam
Echilai polae parakkumadaa
Achchadiththirukkum kaagitha perumai
Aandavanaarkkum illaiyadaa
Aandavanaarkkum illaiyadaa
Nallavan kayil naanayam irunthaal
Naalu perukku saathagam
Odum urulum…
Odum urulum ulagam thannil
Thedum porulum thevaithaan
Thedum porulum thevaithaan
Adhil mayakkam illaamal adakkam irunthaal
Adhuve uyarntha vaazhkkaithaan
Adhuve uyarntha vaazhkkaithaan
Adhuve uyarntha vaazhkkaithaan
Nallavan kayil naanayam irunthaal
Naalu perukku saathagam
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
அது பொல்லாதவன் பையில் இருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம்
எல்லா உயிர்க்கும் பாதகம்
ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
ஆண் : இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்
பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்
நடை பிணமாக நடக்கின்றான்
ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
ஆண் : லட்சங்கள் முன்னே லட்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா
லட்சங்கள் முன்னே லட்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா
ஆண் : அச்சடித்திருக்கும் காகித பெருமை
ஆண்டவனார்க்கும் இல்லையடா
ஆண்டவனார்க்கும் இல்லையடா
ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
ஆண் : ஓடும் உருளும்..............
ஓடும் உருளும் உலகம் தன்னில்
தேடும் பொருளும் தேவைதான்
தேடும் பொருளும் தேவைதான்
ஆண் : அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்