Singers : Shashaa Tirupati, Ghibran and Inno Genga
Music by : Ghibran
…………………..
Oru veetil neeyum naanum..
Ondraga vaazhum neram..
Edhirpaarthae irundhen
Pala kaalam idhunaal varayil..
Kanavellam inidhaai nanavaagum..
Iravin madiyil..
Oru veetil neeyum naanum..
Ondraga thoongum neram..
Edhirpaarthae ezhundhen
Dhinandhorum mudhal naal varayil
Iniyellam muzhudhai arangerum..
Virumbum vagayil..
……………………….
Dhinam dhinam naan
Mayangugirenae
Pagal edhuvo iravedhuvo..
Velichangalai maruppathinalae..
Nilavugalin sadhi idhuvo..
Araiyum kadhavum..
Adaindhae kidandhai
Iravum pagalum..
Inaiyum irulaai..
Unaiyae ulagam
Ena naan nanaiyum
Nilaiyae varamagum..
Oru veetil neeyum naanum..
Ondraga vaazhum neram..
Edhirpaarthae irundhen
Pala kaalam idhunaal varayil..
Kanavellam inidhaai nanavaagum..
Iravin madiyil..
………………………….
Udhadugalin asaivugal endraai..
Pechenavae arindhirundhen..
Oligalilla ini oru velai
Nee koduthaai therindhukonden..
Idhuvae kuraivu
Inimel irukku..
Inidhaai thodarum
Mudhal naal kirukku
Udalin isaigal
Uyirin kasaigal
Marandhen pala naatkal..
Oru veetil neeyum naanum..
Ondraga thoongum neram..
Edhirpaarthae ezhundhen dhinandhorum
Mudhal naal varayil
Iniyellam muzhudhai arangerum..
Virumbum vagayil..
……………………………
பாடகி : ஷாஷா திருப்பதி
பாடகர்கள் : ஜிஹிப்ரான், இன்னோ கெங்கா
இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்
குழு : .............................
பெண் : ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
வாழும் நேரம் எதிர்பார்த்தே
இருந்தேன் பல காலம் இது
நாள் வரையில் கனவெல்லாம்
இனிதாய் நனவாகும் இரவின்
மடியில்
ஆண் : ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
தூங்கும் நேரம் எதிர்பார்த்தே
எழுந்தேன் தினந்தோறும்
முதல் நாள் வரையில்
இனியெல்லாம் முழுதாய்
அரங்கேறும் விரும்பும்
வகையில்
குழு : .............................
பெண் : தினம் தினம்
நான் மயங்குகிறேனே
பகல் எதுவோ இரவெதுவோ
வெளிச்சங்களை மறுப்பதினாலே
நிலவுகளின் சதி இதுவோ
ஆண் : அறையும் கதவும்
அடைந்தே கிடந்தாய்
இரவும் பகலும் இணையும்
இருளாய்
பெண் : உனையே
உலகம் என நான்
நினையும் நிலையே
வரமாகும்
பெண் : ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
வாழும் நேரம் எதிர்பார்த்தே
இருந்தேன் பல காலம் இது
நாள் வரையில் கனவெல்லாம்
இனிதாய் நனவாகும் இரவின்
மடியில்
குழு : .............................
பெண் : உதடுகளின்
அசைவுகள் என்றாய்
பேச்செனவே அறிந்திருந்தேன்
ஒலிகளில்லா ஒரு வேலை நீ
கொடுத்தாய் தெரிந்து கொண்டேன்
ஆண் : இதுவே குறைவு
இனிமேல் இருக்கு
இனிதாய் தொடரும்
முதல் நாள் கிறுக்கு
பெண் : உடலின்
இசைகள் உயிரின்
கசைகள் மறந்தேன்
பல நாட்கள்
ஆண் : ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
தூங்கும் நேரம் எதிர்பார்த்தே
எழுந்தேன் தினந்தோறும்
முதல் நாள் வரையில்
இனியெல்லாம் முழுதாய்
அரங்கேறும் விரும்பும்
வகையில்
குழு : .............................